Posts

Showing posts from 2022

அபுதாபி

Image
  அபுதாபி 7 மாகாணங்களை உள்ளடக்கிய வளைகுடா நாடுகளில் சிறந்த நாடாக விளங்குவது ஐக்கிய அரபு அமீரகம். இதில் வெளி உலகத்திற்கு மிகவும் தெரிந்த மாகாணம், துபாய். அதை தவிர மீதி 6 மாகாணங்கள் அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்மு அல் குன் , ரஸ் அல் கைமா மற்றும் புஜைரா . இதில் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரம். அதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பாலைவனத்தை சோலைவனமாக மாற்றி பொருளாதாரம், கல்வி, மருத்துவம், கலை, பாதுகாப்பு என்று அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. உள்நாட்டு பாதுகாப்பில் உயர்தரமான கட்டமைப்பை கொண்டிருந்தாலும், ஐடி மற்றும் கல்வியில் அண்மையில்தான் வளர்ச்சியை காண தொடங்கியுள்ளது. ஏழு மாகாணமும் தனித்தனி ராஜாக்களால் ஆளப்படுகின்றன. ஒவ்வொரு மாகாணமும் தனக்கென்று தனி சட்டங்களை வைத்திருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு  மற்றும் தொலைத்தொடர்பு என்று சில துறைகள் எல்லா மாகாணத்திற்கும் பொதுவாகவே இருக்கிறது. புகையிலை மற்றும் மதுபானங்களை சில மாகாணங்கள் அனுமதிப்பதில்லை, சில அனுமதிக்கிறது. இதில் வளர்ந்த மாகாணமாக துபாய் தெரிந்தாலும், அபுதாபியின் அரசர் கை தான் பல விஷயங்களில் ஓங்கியிருக்கிறது. உலகத்தில் “முதன

அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2

Image
  நல்ல உறவுகளை சம்பாதிப்பது மிகவும் கஷ்டம், அதாவது தங்களிடம் உதவி கேட்பதற்கு முன்பே ஒருவர், நாம் கஷ்டப்படுவது அவனுக்கு தெரிந்தால் “அவனே உதவி இருப்பான்” என்று அவர்கள் மனதில் தோன்றும் அளவிற்கு நீங்கள் உறவுகளை சம்பாதித்து இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த உலகில் அப்படி யோசிக்கும் உறவுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. சிலர் உதவி என்று கேட்க வரும்போதே தங்களை தயார் செய்து கொண்டு வருவார்கள். அதாவது நீங்கள் நோ என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் அவர்கள் வருவதில்லை. இவர் நோ சொன்னால், அடுத்து இந்த உதவியை நாம் யாரிடம் கேட்கலாம் என்று அடுத்த கட்டத் திட்டம் வைத்திருந்தால், அவர்களுக்கு அத்தகைய எண்ணம் தோன்றாது. உங்களையே நம்பி வரும்போது, நீங்கள் சொல்லும் நோ அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. சரிதான். ஆனால் நாம் ஒரு சரியான காரணத்திற்காக நோ என்று சொல்லும்போது அவர்கள் எவ்வாறு அதை எடுத்துக் கொள்வார்கள், அவர்கள் அதை தவறாக எடுத்துக் கொண்டாலும் அதற்கு நாம் பொறுப்பில்லை தானே!! என்று நினைத்துக் கொள்ளுங்கள்.  நாம் வேண்டுமெ

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

Image
எப்பவாச்சும் யாராச்சும் உதவினு கேட்டு நோ சொல்லி இருக்கீங்களா? ஒரு தடவ சொல்லி பாருங்க. அப்புறம் உங்களுக்கு தெரியவரும் உங்களோட வட்டத்தில் இருக்கிற நண்பர்கள், சொந்தக்காரர்கள், சுற்றம் உற்றம் எல்லாம் எப்படி ரியாக்ட் பண்றாங்கனு. நீங்க “நோ” சொன்ன பின்னும் அவர்களின் பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றால், அந்த உறவு உங்களுக்கானது. நீ நீயா இருனு சொல்வாங்க.  அந்த மாதிரி உங்களை உங்களயா பார்க்கிற சில உறவுகள் இருக்கும். அது சொந்தக்காரங்க மட்டும் அல்ல, உங்க பக்கத்து வீட்டுக்காரங்க, கூட வேலை பார்க்கிறவங்க, உங்க நண்பர்கள் என யாராகவும் இருக்கலாம். உதவின்னு கேட்டு, நீங்க நோ சொன்னால், அதில் ஒரு அர்த்தம் இருக்கும், முடிஞ்சிருந்தா கண்டிப்பா நாம கேட்ட உதவியை செய்திருப்பார், ஏதோ ஒரு சூழ்நிலை அதனால் தான் இவர் கேட்ட உதவிக்கு நோ சொல்லியிருக்கிறார் என்று நினைக்கும் அந்த உறவு தான் நமக்கு ஏற்ற உறவு.  நீங்க நோ சொல்லிய பின்னும் இந்த உறவுகள் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லாமல் எப்பவும் போல உங்களிடம் பழகும்.