Posts

Showing posts from 2021

நவரசா…

Image
  நவரசா …  மீண்டும்   மீண்டும்   வந்த   விளம்பர த்தால்   பயங்கர   எதிர்பார்ப்புடன்   நெட்ஃபிளிக்ஸில்  ஆரம்பித்தேன். தொடங்கியதும் கண்ணில் பட்டவர் விஜய் சேதுபதி. பின்னர் இயக்கம் பிஜெய் நம்பியார்னு பார்த்ததும்  இன்னும் சந்தோஷம். கேரளால பெரிய டைரக்டர்ங்க.. படம் சூப்பரா இருக்கும் போலயேனு நினைக்குறதுக்கு முன்னாடி ,  “ பார்த்தாங்க ,  ஆனா   என்னை   தான்   பார்த்தாங்களானு   தெரியலயே ”,  “ எதாச்சும்   பேசுப்பா ..  பிடிக்கல   சார் ,  உங்கட்ட   பேச   பிடிக்கல ”  னு   டையலாக்கு .  இது   என்ன   மணிரத்தினம்   படம்   மாதிரி   டையலாக்கு   இருக் குனு   நினைக்கும்போதே   ஒருத்தர்   சாக ,  அடுத்த   காட்சியில்   அவரே   உயிரோடு   வர ,..  மனசாட்சியை   காமிக்குறாங்களாம் .  முடியல ..  என்ன   ஒரு  நிம்மதினா, 30 நிமிஷத்துல ஒரு எப்பிசோடு முடிஞ்சுருது. இல்லனா, எப்பவும் காமிக்குற கோவிலு, கர்ப்பிணி  அக்கா, வளைகாப்பு, வைரமுத்து பாட்டுல புதுசா இரண்டு இலக்கிய தமிழ் வார்த்தை (நல்லை அல்லை), ஒரு  கர்னாடிக் சாங்கு , அதிரப்பள்ளி ஃபால்ஸ், அம்பாசமுத்திரம் வயக்காடுனு கொன்னுருப்பாங்க… சரி, அடுத்த கதை நல்லா இருக்கும்னு பார்த்தா,

கொரியாவின் கொசுறுகள்- பார்ட் 4

Image
தெருவுடன் சேர்த்து நாய்களை மட்டுமே சொல்லி பழக்கமுள்ள நமக்கு, தெரு மாடுகள், தெருப்பன்றிகள் என்று சொன்னாலே வித்தியாசமாக இருக்கும். ஆனால், தெரு நாய்களே பார்க்க முடியாத ஊரில் தெருப்பூனைகள் அதிகம் திரிவதை காணலாம். Persian பூனைகள் எனப்படும் அவைகள், உடல் வாகே அப்படியா அல்ல வாக்காக நல்ல சாப்பிட்டு வளர்த்த உடம்பா என்று நின்று யோசித்து கடந்து செல்ல தோன்றும் அளவுக்கு குண்டு குண்டு பூனைகள்.. தெருநாய்கள் தான் கிடையாதே தவிர, பொம்மை தான் என்று அடித்து கூறும் அளவுக்கு அழகான உள்ளங்கை அளவு கூட உள்ள வீட்டு நாய்கள் ஏராளம். அதற்கு செய்யப்படும் பணிவிடை, நம் நாட்டு மாமியார் மாமனார்களுக்கு கிடைக்கிறதா என்பது சந்தேகம் தான். விதவிதமான விலையுயர்ந்த strollerகளில் அழைத்து வருவது குழந்தையை அல்ல, நாய்க்குட்டிகளை என்பது எட்டிப்பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். பல முறை கையில் தூக்கி வருவது பொம்மை என்று நினைத்து பார்க்க, திடீரென அதன் தலையை வெடுக்கென திருப்ப, அய்யயோ உயிர் இருக்கு என பதறியிருக்கிறேன். குழந்தை இல்லாத தம்பதியர்கள் நாய்களையே அவர்களின் பிள்ளைகளாக வளர்ப்பதாக கூறுகிறார்கள்.   வந்து சில மாதங்களே ஆன

கொரிய வளர்ச்சிக்கும் ஜப்பானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ !!!!! KOREAN HISTORY- A GLIMPSE

Image
கொரிய தம்பதிகளின் குழந்தையின்மை சதவீதமும், விவாகரத்து சதவீதமும் அதிகரித்து  வருவதாகவும், தென்கொரிய இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மாணவ பருவத்தில் சிறந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற பெற்றொர்களின் திணிப்பும், கல்லூரி படிப்பை முடித்து வேலை செய்யும் இளைஞர்களுக்கு வேலையிடங்களில் தரப்படும் நெருக்கடிகளும் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாவதற்கான முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதை சரி செய்ய தற்போது தென் கொரிய அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. கொரியன்களுக்கு கட்டாய சனி, ஞாயிறு விடுமுறை அதில் குறிப்பிடத்தக்க ஒன்று.   கொரிய திரைப்படங்களும், சிரீஸ்களும் உலகமெங்கும் பிரபலமாகிக் கொண்டிருக்க, நம்ம ஊரு "3 இடியட்ஸ்" கொரியாவில் மிகப் பிரபலம். பள்ளிகளில் பெற்றோர்களை அழைத்து இப்படத்தை திரையிட்டு காண்பிப்பதாக கூறுகிறார்கள். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மேல்குறிப்பிட்ட நெருக்கடிகள் தராமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.  வயதானவர்கள் ஒரு சிலர் தற்கொலை செய்வதற்கான முக்கிய காரணமாக கலாச்சாரம் வேறுபட்டு, வருமானம் இழந்த பெற்றொர்களை பிள்ளைகள்

கொரிய பயணம் - Part 2

இனி கதவை திறந்து வெளியே செல்ல முடியாது,14 நாள் குவாரண்டைன் என்பதால். முழு நீள பாதரசம் பூசாத கண்ணாடி கதவு கொண்ட பால்கனி வழியாக தெருவும், போய் வருபவர்களும் தெரிந்தது, மனதை லேசாக வருடியது. பால்கனியை திறந்தால், கைக்கு எட்டியது ஓர் கனி கொண்ட மரம். சமைக்க சாப்பிட சில பாத்திரங்களும், வரும் முன்னரே கொடுக்கப்பட்ட மளிகை சாமான் லிஸ்டில் இருந்து தேர்ந்தெடுத்திருந்த அத்தனை சாமான்களும், சோப், சாம்பு, டிஷ்வாஷிங் லிக்விட், டிடெர்ஜெண்ட் லிக்விட், பேஸ்ட், டவல் என அனைத்து சானிட்டரி ஐட்டங்களும், கொரியா வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்று வரை தீராத அளவிற்கு, யுனிவர்சிடி செலவில்  பக்காவாக வீட்டில் முன்னரே வைக்கப்பட்டிருந்தது. டின்னர் மட்டும் அவர்கள் தருவதாக கூறியிருந்தார்கள். பன்றி இறைச்சியும், மாட்டுக்கறியும் டின்னர் மெனுவில் இருந்ததால், வெஜிடேரியன் தேர்ந்தெடுத்தோம். வெஜிடேரியனில் மெனு எதுவும் குறிப்பிடப்படவில்லை. வைத்திருந்த மளிகை சாமானில் நம்மூர் மஞ்சள் பொடி, வத்தல் பொடி எதுவும் கிடையாது. நாங்கள் வந்தது வந்தே பாரத் மிஷன் fலைட் என்பதால், ஆளுக்கு 7 கிலோ மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. நாங்களும் எடுத்து வரவில

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

Image
யாருடா அந்த வாசகர்கள்னு உங்களயே ஒருத்தர ஒருத்தர் மாத்தி கேட்டு டைம் வேஸ்ட் பண்றதுக்கு பதிலா, கீழ உள்ள போஸ்ட வாசிச்சு உங்க வாழ்க்கைல ஒரு நாள உபயோகமா செலவழிச்ச பெருமைய என்னால பெற்றுக்கோங்க. போங்க !!!   தென் கொரியா பயணம். நினைத்துப் பார்க்கவே இல்லை. நினைத்து வைத்திருந்த இடங்களில் தென் கொரியா இருந்ததும் இல்லை.   தென் கொரியா என்றதும், ஆ!! ஐயோ!! கொரியாவா? நான் கொரியன் சிரீஸ் ஒன்னு விடாம பாப்பேன்னு பேசிக் கொண்ட இளசுகள் கூட்டம் ஒரு பக்கம். வந்து ஆறு மாதங்கள் ஆகியும், இந்தியாவில் வைத்து பலரால் பரிந்துரைக்கப்பட்டு பார்த்த 'பாரசைட்' படம் தவிர வேறு ஏதும் பார்த்த நியாபகம் இல்லை. அதுவும் கொரியன் படம் என்பது பார்க்க ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது.. என்ன முக சைஸ் எல்லாம் இங்கிலீஷ்காரன் மாதிரி இல்லையே என்று சந்தேகம் வந்து கூகுளை தட்டிய போது தான் தெரிந்துகொண்டேன்.   மற்றொரு கூட்டம் கிளம்புவதற்கு அரை மணி நேரம் முன்னர் தான், போய் வருவதாக தகவல் தெரிவிக்கிறேன் என்று தெரிந்திருந்தும் 'கொரியா' என்றவுடன், கொரியாவா? அங்க இப்போ தான கொரோனா இருந்தவங்கள எல்லாம் சுட்டு தள்ளிட்டாங்கன்னு செய்தி படிச்