குறையா புகழ் மோடி? ஒரு விமர்சனம் : Strong Image of Modi

 “நானே ராஜா நானே மந்திரி” என்றிருந்த பல உலக தலைவர்களை பதம் பார்த்துவிட்டது, கொரோனா. ருஷியா தொடங்கி மெக்சிகோ வரை நாட்டின் வளர்ச்சி முடங்கியதால், மக்கள் மத்தியில் தலைவர்கள் பற்றிய நன் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதை, சில தனியார் நிறுவனங்கள் மக்களிடம் எடுத்த கணக்கெடுப்பிலும் உறுதி செய்கிறது. ஆனால், என்னதான் உலகளவில் நடந்தாலும், இந்தியாவில் “நானே ராஜா நானே மந்திரி” யாக இன்றளவும் இருப்பவர், பிரதமர் மோடி மட்டுமே!!

மோடி புகழ் பாடுகிறான், இவன் பிஜேபி காரன், சங்கினு நினைச்சு பதிவை வாசிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.

வேலைவாய்ப்பின்மை, பொருளாதர சரிவு, சீன ஆக்கிரமிப்பு, கொரொனா பரவல், நீட் மற்றும் ஜேயியி தேர்வு, பெட்ரோல் டீசல் விலையுயர்வு என்று எத்தனையோ பிரச்சனைகள் நாட்டில் இருக்கும்போது, மயிலுக்கு இரையிடுவதுபோல் வெளியான மோடியின் ஒரு புகைப்படத்திற்கு சமூகவளைத்தலத்தில் இம்மியளவும் வரவேற்பு குறையவில்லை. எப்படி மோடிக்கு மட்டும் இது சாத்தியமாகிறது என்றால், மக்களின் நாடி தெரிந்த, மருத்துவம் படிக்காத பிரதமர். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.

இந்த நூற்றாண்டில், இரவு 8 மணி என்றாலே ஒரு படபடப்பை ஏற்படுத்தும் அளவிற்கு, நவம்பர் 8, 2016, இரவு 8 மணிக்கு பிரதமர் மோடியின் “பண மதிப்பிழப்பு” அறிவிப்பு அமைந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் அதிகமாக இருந்தாலும், இந்தியளவில் மோடிக்கு வரவேற்பே இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. சிறிதளவு குறைந்திருந்தாலும், இன்றளவும் அந்த வரவேற்பு இருக்கிறது என்பதும் உண்மையே. கருப்பு பணத்தை ஒழிப்பேன், தீவிரவாதத்தை ஒடுக்குவேன், நாட்டின் வரி வருமானத்தை பெருக்குவேன் என்று ஒன்றன்பின் ஒன்றாக அறிவிப்பை கொடுத்தாலும், இதுவரையில் எதுவும் நடக்கவில்லை என்பதும் மக்களுக்கு தெரியும். பண மதிப்பிழப்பு மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று நினைக்கும் போதே, உத்திரபிரதேசத்தில் பல தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது பிஜேபி.  500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வசதியில்லாத, அன்றாட தினகூலிகளான மக்கள் அவதிபட்டும், அந்த தொகுதிகளில் மிக பெரிய வெற்றியை பெற்றது பிஜேபி. எப்படி இது சாத்தியமாகிறது பிஜேபிக்கு? மக்கள் ஏன் தங்கள் வோட்டு வங்கியை மீண்டும் தங்களை துன்புறுத்திய கட்சிக்கே கொடுக்கிறார்கள்?

 

சற்று கூர்ந்து கவணித்தால் இதன் சூட்சமம் விளங்கும்.

பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன்சிங், தனது ஆட்சியின் கடைசி காலத்தில், அடுத்து பிரதமராகும் அம்சங்கள் ராகுல்காந்திக்கே இருக்கிறது என்றும், அவரது வழிகாட்டுதலின் பெயரில் இந்த நாட்டிற்காக உழைக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். ஒரு பொருளாதார அறிஞரான அவர், இந்திராவின் பேரன் என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத ராகுல் காந்தியை முன்மொழிந்ததது அவரது பலவீனத்தை வெளிப்படுத்தியது. இதை ஒரு காரணமாக கொண்டு, இந்தியாவை காப்பாற்ற ஒரு பலமான தலைவர் தேவை என்பதை மக்கள் மனதில் விதைத்தனர். பின்னர், அந்த பலமான தலைவன் “மோடியை” தவிர எவராலும் இருக்க முடியாது என்ற எண்ணத்தை விதைத்தனர். உளவியல் ரீதியாக மக்கள் மனதில் துணிவுள்ள தலைவர், மோடி மட்டுமே என்று பதியவைத்தனர். அதுமட்டுமல்லாமல், கட்டுக்கோப்பான மனிதர், தன்னை வர கூடாது என்று சொன்ன நாடான அமெரிக்காவையே திரும்பி பார்க்க வைத்த தலைவர் என்ற பில்டப் வேற. இது அனைத்தையும் தெளிவாக பரப்பி, மோடியின் ஒவ்வொரு முடிவையும் மக்கள் மத்தியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளாக பார்க்க வைத்தனர்.

 

எடுக்கும் முடிவு சரியோ தவறோ தேவையில்லை, துணிவான முடிவா என்பதுதான் முக்கியம். அதுவும், அந்த முடிவை என்னால் மட்டுமே எடுக்க முடியும் என்று மக்களை நம்ப வைப்பது அதன் உச்சம்!!

தான் எடுக்கும் முடிவுகள் நாட்டிற்கு தேவையா இல்லையா என்பது முக்கியமல்ல. நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்ட, யாராலும் தொட முடியாது என்ற பிம்பம் கொண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண போகிறேன் என்று சொல்லும்போது, அந்த தலைவர் மக்கள் மத்தியில் “நாட்டை காக்க வந்திருக்கும் ரட்சகராக” பார்க்கப்படுகிறார். அவர் எடுக்கும் முடிவில் தவறு இருக்காது என்றும் மக்கள் நம்புகின்றனர். இதன் தொடர்ச்சியே, “பண மதிப்பிழப்பு”, “காஷ்மீர் 370 தை ரத்து செய்தது”, “ராமர் கோவிலை கட்டுவது”, “முத்தலாக் நீக்கம்”, “குடியுரிமை சட்ட திருத்தம்”, “சர்ஜிக்கள் ஸ்ட்ரைக்”, “ஜிஎஸ்டி”. இந்த திருத்தங்களால் (முடிவுகளால்) நாட்டிற்கு கிடைத்த பலன் மிக சொற்பம் என்றாலும், மோடிக்கு கிடைத்த அரசியல் லாபம் அதிகம். வெகுஜன மக்கள் மத்தியில் மிக எளிதாக சென்றடைந்துவிட்டார்.

அவர் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையை வெற்றிகரமாக மக்களிடம் சேர்த்துவிட்டார். கொரொனா காலத்தில் கூட, அவரது லாக்டவுனை மக்கள் வரவேற்றனர். மிக ஆரம்ப காலத்திலயே லாக்டவுன் போட்டும் இந்தியாவில் கொரோனாவின் பரவல் அதிகமாகவே காணப்பட்டது. இதற்கு காரணம், மாநில அதிகாரிகளும் மத்திய அதிகாரிகளுமே தவிர, மோடி அல்ல என்று மக்கள் நம்புகின்றனர். காரணம், மோடியின் முடிவு தவறாக இருக்காது என்ற நம்பிக்கையே!! அதையும் மீறி தவறாக இருக்குமேயானால், கடவுள் காரணமாக இருக்கலாம், நேரு அல்லது ராஜிவ்காந்தியின் ஆவியும் காரணமாக இருக்கலாம்.

இந்த நம்பிக்கை எத்தனை காலம் தொடரும்? எத்தனை காலம் நேரு, ராஜிவ்காந்தியின் ஆவி  பழிக்கடா ஆக்கப்படும்?

துணிவுள்ள தலைவன் மோடி என்றாலும், பல விஷயங்களில் முந்தைய பிஜேபியின் பிரதமரான வாஜ்பேய்க்கு நிகர் அல்ல என்பது நிதர்சனமான உண்மையே. ஏனென்றால், அவரது அமைச்சரவையில், தனி மனித புகழ் பாடாமல், அத்வானி, யஸ்வந்த் சின்கா, முரளிமனோகர் ஜோஷி, சுஷ்மா, ப்ரொமோத் மஹாஜன் என்று பல அறிவுஜீவிகள் ஒன்றுசேர்ந்து முடிவுகள் எடுத்தனர். ஆனால் இன்றைய சூழலோ முற்றிலும் வேறுப்பட்டு, எதுவாக இருந்தாலும் தனி மனித புகழ் பாடி “மோடியில்” முடிகிறது. உள்துறை அமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் எதற்கு எடுத்தாலும், “மோடி”, “மோடி”, “மோடி” என்றே கூறுகின்றனர். ஒரு காலத்தில் காங்கிரஸிளும் “இந்திரா”, “இந்திரா”, “இந்திரா” என்றிருந்தது, தமிழகத்தில் “அம்மா”, “அம்மா”, “அம்மா” என்றிருந்தது, வருங்காலத்தில் “சின்னம்மா”, “சின்னம்மா”, “சின்னம்மா” என்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதில் கவணிக்கவேண்டியது என்னவென்றால், தனி மனித புகழ் மாநில அரசியலில் வெற்றி பெற்றாலும், மத்திய அரசியலில் தொடர்ந்து வெற்றிபெறவில்லை.

எதற்காக இதை கூறுகிறேன் என்றால், மிக பிரபலமான நேருவே, இரண்டாவது ஆட்சி காலத்தில் தனது நெருங்கிய நண்பரான படேல் மற்றும் அமைச்சரவை நண்பர்கள் இறந்த பின்னர், தன்னிச்சையாக 1959 மற்றும் 1962 யில் அவர் எடுத்த முடிவுகளான, கேரள அரசு கவிழ்ப்பு, சீன போர், பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியது மறக்க முடியாததே! அதே வரிசையில், தன்னிச்சையான முடிவு, தனி மனித புகழ் என்று மோடியும் இருக்கிறார் என்பது வருத்தமளிக்கிறது.

மோடியை பொருத்தவரை அவரது புகழ் பிம்பம் வழுவானதாக இருந்தாலும், எந்த நேரத்திலும் உடைக்கப்படலாம். துணிவுள்ள தலைவராக தன்னை காட்டிக்கொண்டாலும், இது வரையில் ஒரு நேர்முக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தாதது கேள்விக்குறியே? சர்வதிகாரியாக, தைரியமான தலைவராக உலகம் பார்த்த ஹிட்லரும் செய்தியாளர்களை சந்திக்க தயங்கியுள்ளார் என்பது கூடுதல் செய்தி.

வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கூறிய “மன்மோகன்சிங்கை போன்ற பலவீனமான பிரதமர் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்றால், மோடி போன்ற பலமானவர்கள் இந்தியாவிற்கு மிக பெரிய அச்சுறுத்தல்” என்பதை நினைவுகூர்ந்து இந்த பதிவை முடிக்க விரும்புகிறேன்

Comments

  1. Sarcastic write up... But still you haven't look into micro level i hope you will write TN political scenes.I don't agree all the way you wrote i believe their success is they are up fronting their party and party agendas rather than single man agenda.amy be perception point of view .they are maintaining their next level leader on board.

    ReplyDelete
    Replies
    1. Worth reading nandy aka...keep exploring diverse sectors..Best of luck🤙

      Delete
  2. Good write up. Good view on manliness of Leader and how Indian people attract to the manliness instead of Brilliance.

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?