Posts

Showing posts from July, 2020

கருப்பு – நிற வெறி: Racism at Doorstep

Image
திராவிடன், ஆரியன் என்று அரசியல் பேசும் பதிவு அல்ல இது. நம் தினசரி வாழ்வில் நம்மை அறியாமல் நாம் பேசும் வழக்கு மொழியை பிரித்து ஆராயும் ஒரு முயற்சியே இந்த பதிவு. கருப்பர்கள் என்று சொல்வதில் மட்டும் இல்லை நிறவெறி. கருப்பை வெறுப்போடு ஒதுக்கும் ஒவ்வொரு அசைவுகளிலும் இருக்கிறது நிறவெறி. அண்மையில், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாயிடு என்னும் கருப்பின இளைஞன் போலீசால் கொல்லப்பட்டதால், சமூக வலைத்தளங்களில் “BlackLivesMatter” என்ற ஹாஷ்டாக் பிரபலமானது. இந்த ஹாஷ்டாக்கை பதிவிட்டதில் எத்தனை பேர் தன் மகன்களுக்கு கருப்பு மருமகள்களை தேடுபவர்கள், எத்தனை இளைஞர்கள் தங்களுக்கு கருப்பு கேர்ள்ஃப்ரன்டை  தேடுபவர்கள் என்று தெரியவில்லை.

லாக்டவுன் குமுறல்கள்

Image
கடந்த மூன்று மாதங்களில் பல சம்பவங்கள் புதிது புதிதாக நடந்து விட்டன. நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனா முதல் நெய்வேலி எரிவாயு நிலைய வெடிப்பு வரை அனைத்தும் அடுத்து அடுத்தாற் போல. இடைப்பட்ட காலங்களில் இன்னும் நிறைய. மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்துவதற்குள் ஆசனவாய் மரணம். வருடங்கள் கடந்த பின்னும் , இன்னும் ஆசிபாவின் மரணத்தை மறக்க மறுக்கும் மனதை ரணமாக்கும் விதத்தில் , இன்றும் தமிழகத்தில் சின்னஞ்சிறுசுகளின் சிறகுகள் அடித்து நொறுக்கபட்டு பிணமாக்கப்பட்டிருக்கிறது. பக்கத்து மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இது போன்ற ஒரு மரண வீட்டின் ஓலம் கேட்டு , இனி இப்படி ஒரு அவலம் நடப்பின் , எண்ணி 21 ஆம் நாளில் சிறுமியை சிதைத்த அந்த சவத்தின் சிரம் தூக்கிலிடப்பட்டு வீழ்த்தப்படும் என்று ஆணையிட்டார். ஆனால் ,  நம் மாநில முதல்வர் காதுகளில் நடந்த ஓலம் விழாததற்கு காரணம் போட்டிருந்த மாஸ்க் தான் என்று நாளை செய்தி வந்தாலும் ஆச்சர்யப்படுத்துவதற்கில்லை. அதை , ஆம் என்று வாதாட அரசு வக்கீலைக் கூட இந்நேரம் அப்பாய்ண்ட் செய்திருப்பார்கள்.