THAPPAD – A SLAP – சவுக்கடி (தமிழ் ரீமேக்ல டைட்டில கொஞ்சம் அப்படி இப்படி மாத்திக்கலாம்)

அறிவியலில் “கியாஸ்” (CHAOS) என்று ஒன்றை சொல்வார்கள். அப்படினா, திருநெல்வேலியில் பட்டாம்பூச்சி சிறகடிச்சா, திருத்தணியில் புயல் அடிக்குமாம். ஒரு பெரிய விளைவுக்கு எங்கோ நடக்கும் சின்ன நிகழ்வு காரணமாய் இருக்கும் என்பது தான் அர்த்தம். உதாரணமாக, தசாவதாரம் படத்தின் தொடக்கத்தில் பெருமாள் சிலையை கடலில் போட, இதனால் கடலில் ஏற்படும் சிறு இடையூறுகள், படத்தின் முடிவில் சுனாமி வருவதுபோல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆமா, இதுக்கும் இந்த படத்திக்கும் என்ன சம்பந்தம்? பார்ப்பதற்கு சிறியதாக தெரியும் இந்த படத்தின் ஒரு காட்சியின் முடிவு, படத்தை மட்டுமல்ல சமுதயாத்தையே புரட்டி போடுவதாய் அமைகிறது.



படம் தொடங்கி 5 நிமிஷம் போன style அ பாத்து, நெறய family கதைகள கனெக்ட் பண்ற ஒரு படமா இருக்கும் என்று கணித்தேன். ஆனா, படத்துல வார குடும்பங்கள் மட்டுமல்ல, ஊர் உலகத்துல உள்ள எல்லா குடும்பமுமே சம்பந்தப்பட்டிருக்குனு படம் intervalக்கு முன்னாடியே நாம தெரிஞ்சுக்கிடலாம்.

ரொம்ப ஸ்லோ தான். ஆனாலும் ஒரு சீன் கூட மிஸ் பண்ண முடியல.  ஆடுகளத்துல அழகா அரவமே இல்லாம வந்துட்டு போன தப்ஸி பண்ணு, ஸாரி, பொண்ணு. Actually, ரெண்டுமே கரக்ட்  தாங்க. அவங்க பேரு பண்ணு. But, அவங்க ஒரு பொண்ணு. so எது போட்டாலும் பிரச்சினையில்ல. ரொம்ப பழைய ஜோக் தான். இருந்தாலும் சொல்லுவேன். அந்த பொண்ணு, (நமக்குள்ள சண்ட வேணாம். பொதுவா அந்த பிள்ளனு வச்சுக்குவோமே) வரவர நடிப்புல பிச்சு உதறுது. அதுவும் அந்த பிள்ள Choose பண்ற  அத்தனையும் worth enough women centric Subjects. Pink, Naam shabaana, Game over வரிசைல Thappad. Lady Ayushman Kurranaனு யாரோ சொன்னதுக்கு, “என்ன யாரும் இன்னொருத்தர் கூட compare பண்ண வேண்டாம்னு மறைமுகமா, சொன்னவருக்கு ஒரு Thappad குடுத்துடுச்சு இந்த வெள்ளாவில வச்சு வெளுத்த பிள்ள. சரி,கதைக்கு போவோம்.

யார் மேலயோ உள்ள கோபத்த, நாப்பது பேர் முன்னாடி பொண்டாட்டிய அறைஞ்சு தீத்துக்குற ஒருத்தன், அடுத்த நாள் காலைல ஒரு சாரி கூட சொல்லாம வழக்கம்போல  பொண்டாட்டிகிட்ட டீ எதிர்பாக்குற அதே ஒருத்தன், ஹை-க்ளாஸ் வீட்டு புருஷனா இருந்தாலும், அதே வீட்டுல வேலை பாக்குற அம்மாவோட புருஷனா இருந்தாலும், என்னைக்காவது ஒரு நாள், உங்க so-called Class of life க்கு ஏத்தார் போலபொண்டாட்டிட்டய ஏதோ ஒரு வகைல ஆதிக்கம் செலுத்த தான் செய்யுறீங்க என்ற ண்மைய மிக எதார்த்தமா சொல்லுற படம். 

'No means no' மாதிரி, ஒரு நாள் மனைவியிடம் காட்டப்படும் ஆதிக்கமானாலும், அது ஆதிக்கம் என்ற வார்த்தையின் அகராதிக்குள் தான் வருகிறது என்பதும், வீட்டுச் சுவரின் வர்ணம் முடிவு செய்வது முதல், 'சமையல முதலில் கத்துக்கோ, அப்புறமா வண்டி ஓட்ட கத்துக்கலாம்' என்ற வெளிப்படையாக தெரியாத அடக்குமுறை பேச்சுக்கள் வரை சின்ன சின்ன விஷயங்களிலும், ஆண்களுக்கே தெரியாமல் ஆண் ஆதிக்கம் சிறிதளவேனும், இன்றளவும் இருக்கத் தான் செய்கிறது என்பதை அழகாக படத்தில் காட்சிப்படுத்தி இருக்காங்க.

சின்ன வயசுல தன் மகளுக்கு வயிறுவலி வந்தாலே, காய்ச்சல்ல படுத்துக்குற அப்பா மட்டும்தான் மகள் அறையப்பட்டதை நினைத்து மீண்டும் காய்ச்சலில் படுத்துக் கொள்கிறார். பொண்ணு ஒரு கட்டத்துல கேக்குறா, நான் எதுவும் தப்பு பண்ணிடலையேன்னு? அதுக்கு, "மனசுக்கு சரினு படுறத செய்யுற எல்லா காரியமும், எப்பொழுதுமே சந்தோஷம் தராது. ஆனாலும், சரினு பட்டத செய்வோம். தப்பா இருந்தா கொஞ்ச நாள் கழிச்சு திருத்திக்க முடியலன்னாலும் தெரிஞ்சுக்குவோம்"னு அதுவரை நெறிமுறைகள் சொல்லி கொடுத்து வளர்த்த அப்பா, இயல்பையும் ரொம்ப எதார்த்தமா சொல்லுறார். வாழ்க்கைய இயல்பா வாழ சொல்லிக் கொடுக்குற தைரியமான வார்த்தைகள், இதவிட இருக்காதுனு நினைக்குறேன். புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க | புரியாதவங்க படத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க || அப்படிபட்ட அப்பாவும் கூட தன் மனைவியின் கனவுகளை புதைத்த கணவர் தான் என்பது, வாழ்ந்து முடிந்த காலங்களில் தன் மனைவி சொல்லப் போய் தான் தெரிகிறது

அடுத்த நாளே மிகவும் இயல்பாக இயங்கும் அவளது மாமியார் வீடும், ஒரு வாரம் கழித்தும் “கணவனிடம் அறை வாங்கியவள்” என்ற பார்வையில் பார்க்கும் அந்த நாற்பது பேரும் தான் அவளை தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வைக்கிறார்கள். ஒரு அறை (SLAP)க்கு இவ்வளவு பெரிய முடிவா என்று சீறுபவர்களுக்கு அது ஒரு பெண்ணின் ‘தனிப்பட்ட விருப்பம்’, தவிர, படம் சொல்லும் கருத்து அதுவல்ல.  

மனைவியோட சுய கவுரவம் என்கிற கோட்ட தாண்டி  எல்லை மீறுற எல்லா கணவன்களும், உங்க மனைவியும் இத செய்யுறதுக்கு முன்னாடி இத ஒரு பாடமா எடுத்துக்கோங்க என்பது அல்ல இந்த படத்தின் கருத்து. தப்ஸியைப் பார்த்து அவரது வக்கீலும் வீட்டை விட்டு செல்ல துணியும் அதே தைரியம் (AND) தினமும் அடி வாங்கும் அவள் வீட்டு வேலைக்காரப் பெண் ஒரு நாள் திமிறி திரும்ப அடிக்கும் அதே வீரமும் எல்லாப் பெண்களுக்கும் வேண்டும் என்பதும் அல்ல.

பெண்ணும் உங்கள போல ஒரு சக உயிரினம் தான். எந்த வகைல நீங்க உயர்ந்துட்டீங்கங்குற சாட்டையடி கேள்வியையும்மனைவின்னாலே பொறுத்து போகிறவள் என்று வாழ்ந்து காட்டும் அம்மாக்களுக்கும், மாமியார்களுக்கும், தாங்கள் வளர்க்கும் சந்ததியிடம், பெண்ணுக்கும் கனவுகள் உண்டு, தன்மானம் உண்டு. ஒழுங்கு மறுவாதையா நடந்துக்கோங்கடா | ஆம்பள பயலுவளா' என்று சிம்பிளான அறிவுரையை எடுத்துச் சொல்ல வைக்கும் படம்.

"the way to a man's heart is through his stomach" என்று பெண்களுக்கு சொல்லி கொடுக்கும் சமுதாயம், “there is something called women’s heart” என்று பேச்சுக்குக் கூட ஏன் ஒரு சொலவடையை சொல்லி வைக்கவில்லை. கூடவே, உன்னோட அந்த manற்கு பிடித்தது போல் நடக்கவில்லையென்றால், அந்த man வேற யாராயைவது தேடிச் செல்வான் என்ற கேவலமான கிடுக்குப்பிடியையும் மறைமுகமாக போட்டு விட்டுச் செல்கிறது மேற்சொன்ன சொலவடை.

காலங்கள் கடந்து, தலைமுறைகளைப் பார்த்து வளர்ந்த கட்டமைப்பில் இருக்கும் சமுதாயத்தில், பெண்கள் மேலான அடக்குமுறைகள் நிறையவே தளர்ந்து இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையே. 

நடித்திருக்கும் அத்தனை பேரும் நியாயம் சொல்லி இருக்கிறார்கள்.. படம் பார்த்து இன்னும் தெளிந்து கொள்ளுங்கள்.

Comments

  1. சொலவடை meaning ithana

    கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் சொலவடை எனப்படும்.

    ReplyDelete
    Replies
    1. பழமொழி சொல்லி என்பதை விட சொலவடை சொல்லி என்று சொல்வது ல ஒரு rhyming இருந்ததால்......... மற்றபடி, நீங்கள் கூறிய அர்த்தம் தான்

      Delete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. Indrum pala pengalin nilayai unarthum pathivu

    ReplyDelete
  4. பொண்டாட்டிட்டய ஏதோ ஒரு வகைல ஆதிக்கம் செலுத்த தான் செய்யுறீங்க . Yosikka vaikire vari. Nice writing.

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?