Posts

Showing posts from May, 2020

THAPPAD – A SLAP – சவுக்கடி (தமிழ் ரீமேக்ல டைட்டில கொஞ்சம் அப்படி இப்படி மாத்திக்கலாம்)

Image
அறிவியலில் “கியாஸ்” (CHAOS) என்று ஒன்றை சொல்வார்கள். அப்படினா, திருநெல்வேலியில் பட்டாம்பூச்சி சிறகடிச்சா, திருத்தணியில் புயல் அடிக்குமாம். ஒரு பெரிய விளைவுக்கு எங்கோ நடக்கும் சின்ன நிகழ்வு காரணமாய் இருக்கும் என்பது தான் அர்த்தம். உதாரணமாக, தசாவதாரம் படத்தின் தொடக்கத்தில் பெருமாள் சிலையை கடலில் போட, இதனால் கடலில் ஏற்படும் சிறு இடையூறுகள், படத்தின் முடிவில் சுனாமி வருவதுபோல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆமா, இதுக்கும் இந்த படத்திக்கும் என்ன சம்பந்தம்? பார்ப்பதற்கு சிறியதாக தெரியும் இந்த படத்தின் ஒரு காட்சியின் முடிவு, படத்தை மட்டுமல்ல சமுதயாத்தையே புரட்டி போடுவதாய் அமைகிறது. படம் தொடங்கி 5 நிமிஷம் போன  style அ பாத்து , நெறய family கதைகள கனெக்ட் பண்ற ஒரு படமா இருக்கும் என்று கணித்தேன். ஆனா, படத்துல வார குடும்பங்கள் மட்டுமல்ல , ஊர் உலகத்துல உள்ள எல்லா குடும்பமுமே சம்பந்தப்பட்டிருக்குனு படம் interval க்கு முன்னாடியே நாம தெரிஞ்சுக்கிடலாம். ரொம்ப ஸ்லோ தான். ஆனாலும் ஒரு சீன் கூட மிஸ் பண்ண முடியல.  ஆடுகளத்துல அழகா அரவமே இல்லாம வந்துட்டு போன தப்ஸி பண்ணு , ஸாரி , பொண்ணு. Actually,

அட்டவணை - A Married Woman's Timetable - part-6

குளிச்சு முடிச்சு வாரதுக்குள்ள துவட்ட துண்டும், போட துணியும் ரெடியா எடுத்து வைச்சதுக்கெல்லாம், மனசு தவியா தவிக்கும் வெளிய வந்து துள்ளி குதிக்க ...... பூசை நேரம் தினமும் வந்தா, சட்டு புட்டுன்னு பூச போட்டு உங்க கையால ஒத்தும் சூடம் கேட்டு  என் கண்ண மூடி நிப்பேன் நம்ம பிள்ளைக் குட்டி வந்த பின்னும் துப்பித் துப்பி விளையாட்டா  போடும் ஆட்டமெல்லாம் அதுகளோட சேந்து நாம போட வேணும்.... நம்ம பிள்ள வந்த பின்ன கூட,  ஒரு கையில அவன் படுத்துறங்க , மறுகையில நான் படுத்துக் கொள்ள எப்பொழுதும் போல என்ன தட்டிக் கொடுக்கும் தூக்கம் வேணும்.... உங்க கிட்ட படுக்கதுக்கு  எங்க ரெண்டு பேருக்குள்ள அடிபுடி சண்ட  தினமும் வேணும். நம்ம ரெண்டாவது புள்ள வந்தப்புறம் கூட ,  ஆராய்ச்சி செஞ்சுனாலும் கிட்ட வந்து படுக்கதுக்கு ஒரு வழிய கண்டெடுப்பேன். நீங்க தனியா தூங்கும் போது  அரையடி தூரத்துல நின்னுகிட்டு உதட்ட குவிச்சு  இடையிலுள்ள காத்துக்கெல்லாம் அரை நிமிசத்துக்கும் மேல முத்தம் குடுத்துருக்கேன்

வந்தார்கள் வென்றார்கள் - A review on pages with blood shower and treasury loot

Image
2 லட்சம் பிரதி , 26 வது எடிஷன் - என்று வாசிக்க அழைக்கும்   அட்டைப்படம் , வந்தார்கள் வென்றார்கள் என்ற வசீகரிக்கும் தலைப்பு , உள்ளே வண்ண வண்ண படங்கள் , என்று அத்தனை அம்சங்கள் இருந்தாலும் , உடனே வாசிக்க தூண்டுற அளவுக்கு நான் புத்தகப் பிரியர் இல்ல. வருடங்கள்    முன்னாடி , அரை டசன் புக்ஸ ஒரே மாசத்துல முடிச்சதா நியாபகம். அந்த திடீர் ஆர்வம் எப்படி வந்தது ? பின்னர் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்குற அளவுக்கு ஒரேயடியான மறைவு ஏன் ? எதற்குமான காரணத்தையும் ஆராய விரும்புனது இல்லை.   இந்த லாக்டவுன்ல நேரம் போகாதத மறைக்க "நானும் தான் வாசிப்பேன்னு" ஒரு நல்ல புக்க தேடி புறப்பட்டேன். சரி நம்ம நாட்டோட பின்புலம் பத்தி , அங்க அங்க கேள்விபட்டிருப்போம். ஆனா , முழு வரலாறை இத வாசிச்சா   ஓரளவுக்கு தெரிஞ்சிக்கலாம ் என்ற ஆர்வம் தான் வாசிக்க வச்சுது. இருந்தாலும் ஒரு எரிச்சலோட தான் வாசிக்க ஆரம்பிச்சேன். காரணம் புத்தகத்தோட தலைப்பு. “வந்தார்கள் வென்றார்கள்”. எவன் ஊர்ல வந்து எவன் வெல்லுறதுங்குற அந்த சின்ன எரிச்சல்.   கடைசி பத்தி தந்த சின்ன ஆறுதல் தவிர ,   புத்தகத்த   முழுசா   வாசிச்சு முடிச்சப்புற