பிட்காயின் - Underworld money Bitcoin - What and How it works?

பிட்காயின் என்பது டிஜிட்டல் கேஷ். ஒரு பிட்காயினின் இன்றைய (29-03-2020) மதிப்பு இந்திய ரூபாய்க்கு 4,63,261.56. கொரோனாவின் பார்வையில் பிட்காயினும் தப்பிக்கவில்லை. ஏனென்றால், சில வாரங்களுக்கு முன்பு, ஒரு பிட்காயின் இந்திய ரூபாய்க்கு 6.5 லட்சத்திற்கு மேலே இருந்தது குறிப்பிடதக்கது.





ஆன்லைன் ட்ரான்சாக்ஸன், கூகுள்பே, போன்பே, பேட்டியம், நெட்பாங்கிங் போலதான் பிட்காயினும். ஒரே ஒரு வித்தியாசம், வங்கி என்னும் மூன்றாம் நபர் கிடையாது.

உதாரணத்திற்கு, கூகுள்பே பயன்படுத்தி செலுத்தப்படும் பணம், முதலில் உங்க பேங்கின் அனுமதி பெறும். பின்னர், செலுத்தப்படும் நபரை சென்றடையும். 

பிட்காயின் பயன்படுத்தி பணம் செலுத்தும் போது, பணம் நேரடியாக செலுத்தும் நபரை சேரும். வங்கி என்னும் மூன்றாம் நபருக்கு இங்கே வேலை இல்லை.

Whatsapp ல அனுப்புர தகவல்கள் (புகைபடம், கானொளி) வெளியே கசியாம இருக்க எண்ட் டு எண்ட் என்கிரிப்சன் இருக்கு. நீங்க அனுப்புர தகவலை Whatsapp செக் பன்னுதுனு தெரிஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?

ஆனா, வங்கியில் இருக்குற உங்க பணத்தை, வங்கிக்காரன் கண்ணுல வெளக்கெண்ணை விட்டு பார்த்துட்டு இருக்கான். உங்க அக்கவுண்ட்ல இருக்கும் பணம், நீங்கள் பணம் கொடுக்கும் நபர்களின் விவரங்கள், உங்க அக்கவுண்ட்ல பணம் போடும் நபர்களின் விவரங்கள் என்று அனைத்தையும் வங்கி கண்காணிக்கிறது. தேவைப்பட்டால், வங்கியிடம் இருந்து அரசு வாங்கிக்கொள்ளும்.

வெளிநாட்டுல இருக்குற நபருக்கு பணம் அனுப்பிய அனுபவம் உண்டா? எத்தனை டாக்குமென்ட்ஸ் கேட்குறாங்க தெரியுமா? பிட்காயின்ல கட்டுபாடே கிடையாது. உங்க விருப்பபடி யாருக்குவேனும்னாலும் அனுப்பலாம். யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க?

அடுத்து, இந்தியாவின் பணத்தை ரூபாய் என்றும், அமெரிக்காவின் பணத்தை டாலர் என்றும், ஒவ்வொரு நாட்டுக்கு வெவ்வேறு பணம் உள்ளது. இதனால, ஒரு நாட்டுல இருந்து இன்னொரு நாட்டுக்கு போக நேர்ந்தால், போகுற நாட்டில செல்லுபடி ஆகும் பணத்தை எடுத்து செல்வது கட்டாயம். இப்படி பணம் மாற்றம் செய்ய வங்கிகளுக்கு கமிஷன். ஆனால், பிட்காயினோ, அமெரிக்காவிலிருந்து ஆஸ்த்ரியா வரை அனைத்து நாட்டிலும் செல்லுபடியாகும்!!!!.

பிட்காயின் டிரன்சாக்சனில் நம்மை பற்றிய விவரங்கள் எதுவும் இருக்காது. உதாரணத்திற்கு, பிட்காயினில் அனுப்புநர் மற்றும் பெறுநர் விவரங்கள் வெளியே தெரியாது. எளிதாக சொல்வதென்றால், நம்ம பணம் நம்ம கன்ட்ரோல்ல.

சமுக சேவை, போராட்டம்னு யாராச்சும் அரசாங்கத்த தொந்தரவு செஞ்சா முதல் வேலையா போராட்டக்காரர்களின் அக்கவுண்ட்ட அரசு முடக்கும். பிட்காயின்ல அது நடக்காது. உங்க அக்கவுண்ட்ட யாரு நினைச்சாலும் முடக்க முடியாது.

திடீர்னு, 500 1000 நோட்டு செல்லாதுனு சொல்ற மாதிரி, பிட்காயின்ல சொல்ல முடியாது. ஏன்னா பிட்காயினை யாரும் தன்னுடைய கட்டுபாட்டில் வைக்க முடியாது.

எல்லாம் ஓகே. பிட்காயின்னா என்ன? அது எப்படி இருக்கும்? யாரு அதை அச்சடிக்குறாங்க? பிட்காயின், பேங்கு கட்டுபாட்டில் இல்லைனா, யாருதான் கண்ட்ரோல் பன்றது? இதை பணம்னு எப்படி நம்புறது?

பிட்காயின்னா என்ன: எளிதாக சொல்வதென்றால், “டிஜிட்டல் பணம்”. டெக்னிக்கலா சொன்னா, “கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்”.
யாருதான் கண்ட்ரோல் பன்றது?: மக்கள் தான்!!! (ஒரு குட்டி கதை கீழே இருக்கு.. அத படிங்க கண்டிப்பா புரியும்)
பணம்னு எப்படி நம்புறது?: முதல்ல பணம்னா என்னனு தெரியுமா? ஈஸியா கிடைக்க கூடாது, இல்லைனா எல்லாரும் அச்சு அடிச்சுருவான். என்ன தான் கசங்கி அழுக்கானாலும் அதோட மதிப்பு குறைய கூடாது, எவ்வளவு வருஷமானாலும் மதிப்பு அப்படியே இருக்கனும். சொல்லப்பட்ட அனைத்து அம்சங்களும் பிட்காயினுக்கு உண்டு.

பிட்காயின் ஒரு டிஜிட்டல் பணம். அதனால, அதை அச்சு அடிக்கலாம் முடியாது. மொத்தமாக, இரண்டு கோடியே பத்து லட்சம் பிட்காயின் தான்!!! அதனால பிட்காயினுக்கு தட்டுபாடு இருந்துட்டே இருக்கும். சும்மா தேவைப்படும் போது அரசாங்கம், அச்சு அடிக்குற மாதிரி அச்சு அடிக்க முடியாது. முக்கியமா, கள்ள பிட்காயின் கிடையவே கிடையாது. 

பிட்காயினை இன்னும் தெளிவாக புரிந்துக்கொள்ள, ஒரு குட்டி கதை சொல்றேன் கேளுங்க……

ஒரு கிராமத்தில் பத்து குடும்பங்கள் வசித்து வந்தன. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் கையில் நூறு ரூபாய் வைத்திருந்தன. (கற்பனையாக, மக்களுக்கு வேறு எந்த வகையிலும் பணம் கிடைக்காததால், குடும்பத்திற்கு நூறு வீதம், கிராமத்தில் மொத்தமாக புழக்கத்தில் இருந்தது, ஆயிரம் ரூபாய் மட்டுமே!! ஆனா, ஊர் தலைவரிடம் மட்டும் ஆயிரம் ரூபாய் எக்ஸ்ட்ரா இருந்துச்சு. இந்த பணத்த எப்ப, எப்படி செலவு செய்வாருனு பின்னாடி பார்க்கலாம்.)

குடும்பங்களின் இடையே நடக்கும் வரவு செலவு கணக்குகளை பராமரிக்க, கிராமத்தின் நடுவே ஒரு பெரிய கரும்பலகையை வைத்திருந்தார்கள். அந்த பலகையில், பத்து குடும்பங்களின் பெயர்கள், அவர்களின் வரவு செலவு விவரங்கள் அனைத்தும் குறிக்கப்பட்டிருந்தன. இதனால், ஒவ்வொரு குடும்பத்தின் பண விவரங்கள், கிராமத்தில் இருந்த அனைவருக்கும் தெரிந்திருந்தது.

ஜாலியா ஊதாரியா செலவு செய்ததால், அந்த கிராமத்தில் ஒருவரிடம் பணம் குறைய ஆரம்பித்தது. என்ன செய்யலாம்னு யோசிச்ச அந்த மனிதர், இரவோடு இரவாக கரும்பலகையில் இருக்கும் குடும்பங்களின் வரவு செலவு கணக்கை மாற்றி எழுத முடிவு செய்தார். அனைவரும் தூங்கிய பின், வேலையை கச்சிதமாக முடித்தார்.

அடுத்த நாள் விடிஞ்சதும் கிராமத்தில் ஒரே கூச்சல். கரும்பலகையில் எவ்வளவு ரூபாய் திருத்தம் செய்தாரோ, அவ்வளவு ரூபாய் தன் வீட்டில் திருட்டு போயிட்டுனு கத்த ஆரம்பிச்சுட்டார். என்ன பன்றதுனு தெரியாத ஊர் தலைவர், கடைசியா திருட்டு போனதாக சொன்ன பணத்தை அவர்ட்ட இருந்த எக்ஸ்ட்ரா ஆயிரத்தில எடுத்து கொடுத்தார்.

(கரும்பலகையை, ஒரு வங்கியின் லெட்ஜர், டேட்டாபேஸ் யுடன் ஒப்பிடலாம். இரவோடு இரவாக கரும்பலகையில் திருத்தம் செய்தவரை “ஹாக்கர்” என்று சொல்லலாம். நம்முடைய பணத்தின் வரவு செலவு மொத்தமாக வங்கியின் டேட்டாபேஸ்சில் இருக்கும்.  இதை, சென்ட்ரலைஸ்டு டேட்டாபேஸ்னு சொல்வாங்க. ஹாக்கர்ஸ், வங்கியின் டேட்டாபேஸ்சை தன் கட்டுப்பாட்டில்  எடுத்து விட்டால், அவங்க இஸ்டத்திற்கு யார் அக்கவுண்டையும் அழிச்சு எழுதலாம்.)

சரி, கதையை பார்க்கலாம். கரும்பலகையை யாரும் திருத்தி எழுதாம இருக்க என்ன செய்யலாம்னு ஊர் தலைவர் யோசிச்சார். கரும்பலகையை காவல் காக்க நிரந்தரமா ஒரு காவலாளியை போடலாமா? ஒருவேளை காவலாளி லஞ்சம் வாங்கிட்டு கரும்பலகையில் திருத்தம் செய்ய அனுமதிசுட்டா? பயங்கரமா யோசிச்ச ஊர் தலைவர், ஒரு முடிவுக்கு வந்தார்.

ஊரின் நடுவே இருந்த கரும்பலகையை எடுத்துவிட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கரும்பலகையை கொடுத்தார் (இத தான் டெக்னிக்கலா, டிசென்ட்ரலைஸ்டு டேட்டாபேஸ்னு சொல்வாங்க). கூடுதலாக, தண்டோரா போட ஒருவனையும் நியமித்தார்.

இப்ப, குடும்பங்களிடையே பண பரிமாற்றம் நடந்தவுடன், தண்டோரா காரன் ஊர் முழுக்க சொல்லிருவான் (டெக்னிக்கலா, இதை ப்ராட்காஸ்டிங் னு சொல்வாங்க). இதுனால, நான் ஊர்மக்களுக்கு சொல்றது என்னனா, இன்னாரு இன்னாருக்கு இவ்வளவு பணம் குடுத்திருக்காருங்கோ!!!!.......

உடனே ஊர் மக்கள், தங்கள் வீட்டில் இருக்கும் கரும்பலகையில், பணம் கொடுத்த குடும்பத்திற்கு செலவையும், பணம் பெற்ற குடும்பத்திற்கு வரவையும் பதிவு செய்துகொள்வர். இந்த சூழலில், யாரேனும் வரவு செலவை மாற்றி எழுத நினைத்தால், ஒவ்வொரு குடும்ப கரும்பலகையிலும் மாற்ற வேண்டும். இது, நடைமுறையில் சாத்தியமற்றது. 

இதுபோக, தண்டோரா காரன் சொன்ன விஷயத்தை கரெக்ட்டா எல்லாரும் பதிவு செஞ்சிருக்காங்களானு, ஊர்ல யாரு முதல்ல சரி பார்த்து சொல்றாங்களோ, அவங்களுக்கு (இவங்களை டெக்னிக்கலா மைனர்ஸ்னு சொல்றாங்க), தலைவர் 10 ரூபாய் சன்மானமாக (இது தான் பிட்காயின்) தருவதாக சொல்லியிருந்தார். இதனால, தண்டோரா கேட்டதும், ஊர்ல எல்லாரும் போட்டி போட்டு முதல் ஆளா பதிவை சரிபார்த்து சன்மானத்தை வாங்க ஓடுவாங்களாம். இதுல என்ன லாபம்னா, ஊர்ல எல்லா பயலும் கணக்குப்பிள்ளை யா இருப்பான். வரவு செலவுல ஒரு சின்ன தப்பு கூட நடக்காது. சோ, பிட்காயின் இஸ் வெரி வெரி சேஃப்.

இந்த சன்மானம் நாலு வருஷத்திற்கு ஒரு முறை புதுபிக்கப்படுமாம்.

பிட்காயின் நெட்வொர்க்ல (ப்ளாக்செயின்னு சொல்வாங்க) நிறைய பேர் இருப்பாங்க. ஒருத்தர் கண்ட்ரோல்ல இருக்காது. அதுபோக, ஒருத்தரோட வரவு செலவு எல்லார்டயும் இருக்கும். ஹாக் பன்னி எதையும் மாத்திட முடியாது. இப்படி வரவு செலவு கரெக்ட்டா நடக்குதானு பத்து நிமிஷத்திற்கு ஒருமுறை சரி பார்க்கும் நபருக்கு கொடுக்கப்படும் ரிவார்டு தான் பிட்காயின். இன்னும் உள்ளே நுழைந்து பார்க்கலாமா? கொஞ்சம் குழப்பும் ஒகேவா? விருப்பம் இருப்பவர்கள் கமென்ட் பண்ணுங்க.. அடுத்த பதிவில எழுதுறேன்.

Comments

  1. Very nice explanation. It may chilly question but i have to clarify. Who will be village president ? And how will he gets amount 10 rs to give others ?

    ReplyDelete
  2. nice question and thanks for asking.

    10rs just a token i have used. more precise i shall use Rs.6.25
    right now the miners get 6.25 bitcoins for each mining.
    It usually become half every four 4 yrs. initially it was 50, then 25, then 12.5, now 6.25
    the village president represents an automatic routine which will give the rewards to miners automatically.

    ReplyDelete
  3. Good one. My question - Is financial transparency good for economy or not ?

    ReplyDelete
  4. Thank u Suresh.
    It is good. There's so much secret sum that we pay to banks. Read my post oo MDR. We need a third party to verify us, in order to validate our transactions. We r paying for that, too. In addition to that, credit card, debit card, paypal ... We are all charged. Only disadvantage with bitcoin is irreversible transactions. When the process has been made, it is over. No one can bring it back.

    ReplyDelete
  5. Wonderful post. My doubt is the value for bitcoin differs from country to country just like the money as we have it. How is it calculated as 4.6L for Indian money?

    ReplyDelete
  6. சரியான முறையில் விளக்கிய ஆசிரியருக்கு தங்க கிரீடத்தை அணிவிக்கனும்.

    ReplyDelete
  7. Hi, I need more information about bitcoin

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?