Posts

Showing posts from March, 2020

பிட்காயின் - Underworld money Bitcoin - What and How it works?

Image
பிட்காயின் என்பது டிஜிட்டல் கேஷ். ஒரு பிட்காயினின் இன்றைய (29-03-2020) மதிப்பு இந்திய ரூபாய்க்கு 4,63,261.56. கொரோனாவின் பார்வையில் பிட்காயினும் தப்பிக்கவில்லை. ஏனென்றால், சில வாரங்களுக்கு முன்பு, ஒரு பிட்காயின் இந்திய ரூபாய்க்கு 6.5 லட்சத்திற்கு மேலே இருந்தது குறிப்பிடதக்கது.

“சாந்து பொட்டு, சந்தன பொட்டு” கம்பு சுத்தும் காவல்துறை!! - Corona awareness is indeed required rather than lathi charge

Image
கையில் தடிகளோடு நிற்கும் காவல்துறையினர், கேள்வியே கேட்காமல், கண்ணில் பட்டவர்களை அடிக்கிறார்கள் [ REF ]. இதை காணொளியாக எடுத்து சமூகவலைதளத்தில் பரப்புகிறார்கள் சிலர். அதைக் கண்டு ரசிக்கிறார்கள் பலர். அடிவாங்கியவர்களில் எத்தனை பேர் முக்கியமான  விஷயத்திற்காக வெளியே வந்திருக்கக் கூடும்? தவறோ! சரியோ! ஒருவரின் துன்பத்தில் நாம் சிரிப்பது எந்த விதத்திலும் சரி ஆகாது.  செய்தித்தாள்களில் அடிவாங்கியவர்களின் புகைப்படங்களை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. அவர்களின் முதுகில் சுவஸ்திக் முத்திரை போல், ரப்பர் ட்யூப்களால் அடிவாங்கிய தடங்கள், போலீஸ் செயலின் பரிதாபங்கள். அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் குறை கூறவில்லை. சாலை சிக்னலில் சில அதிகாரிகள் மக்களிடம் மன்றாடும் காணொளிகள் மனதை உருக்குபவை.  மஹராஸ்டிராவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதில் உயிர்யிழந்துள்ளார் [ REF ]. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் மருத்துவர்களை தாக்கும் புகைப்படம், இந்தூரில் செய்தியாளர்களை தாக்கியதாக போலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் [ REF ] என்று பட்டியல் நீண்டுகொண்டுபோகிறது. புதுசா வைரஸ் வந்துட்டுனா நான் எதுக்கு வீட்டுக்குள்ள

வைரஸின் கருணையால் நாம் வாழ்கிறோமா? - Better understanding of Life of Virus

Image
மரபணு அதோட வம்சத்தை பெருக்க போட்ட ப்ளான்ல ஒன்னுதான், ஆண் பெண் கூடலாம். பாஸ், நான் சொல்லல. ரிச்சட் டாக்கின்ஸ் அவரோட “Selfish Gene” புக்ல சொல்றாரு.   மனித வரலாற்றின் தொடக்கத்தில் பாக்டீரியா, வைரஸ் லாம் கொஞ்சம் வைலன்ட்டா தான் இருந்துருக்கு. இதனால என்ன ஆச்சுனா, மக்கள் கொஞ்ச வயசிலயே மண்டய போட்டுருக்காங்க. தான் வாழ மனித உடல் தேவை என்பதால், பரிணாம வளர்ச்சியில் தன்னோட வைலன்ஸ் கேரெக்ட்டரை குறச்சுகிடுச்சாம், வைரஸும் பாக்டீரியாவும்.... இப்ப என்ன நினைக்க தோனுதுனா, நம்மளால பாக்ட்டீரியா வைரஸ் லாம் வாழுதா, இல்லை அதுகளால நாம வாழுறோமானு. [ REFERENCE ] வைரஸ் என்பது உயிரணு அல்ல, அது ஒரு துகள். எப்பொழுதும் தான் வாழ, ஒரு விருந்தாளியை தேடும். சரியான நபரின் உடம்பிற்குள் குடியேறும் வைரஸ், முதல் வேலையா இனப்பெருக்கம் செய்யுமாம். அதுக்கு அடுத்து தான் பால் காய்ப்பு.   தன்னையே அறியாமல், பல நேரங்களில் தான் குடி புகுந்த விருந்தாளியை வெகுவாக பாதித்து சாகும் நிலைக்கு கொண்டு போகுமாம். அப்படி ஒரு நிலை வரும் முன்னால், வைரஸ் மற்றொரு விருந்தாளியை தான் உயிர் வாழ தேடுகிறது. இப்படி ஒருவர் உடம்பிலிருந்து மற

கொரோனா கவச் - Corona Kavach new App to check the safeness of places in India

Image
(இந்த ஆப் செயலில் இல்லை. அரசாங்கம் திரும்ப பெற்றுக்கொண்டது) கொரோனா! கொரோனா! கொரோனா! பல போலி செய்திகள் பரவுகிறது. காவல்துறை போலி செய்தி பரப்புபவர்களுக்கு குண்டாஸ் "கிஃப்ட்" குடுக்காங்களாமே!! தயவுசெய்து கட்டுப்பாடோடு இந்த 21 நாட்களை கடப்போம்.  உங்களுக்காக மத்திய அரசு ஒரு ஆப் "APP" வெளியிட்டுள்ளது. ஆப்பின் பெயர், கொரோனா காவச் "corona kavach". kavach என்றால் கவசம் என்று பொருள். பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் பகுதி எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். GPS location னை ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பயண விவரங்கள், அவர்கள் சென்றுவந்த இடங்கள், அவர்களின் சுற்றுப்புறம் என்று பல தகவல்களை வைத்து, நாம் வசிக்கும் அல்லது இருக்கும் இடம் பாதுக்காப்பானதா என்பதை இந்த ஆப் கூறுகிறது.  பயப்பட வேண்டாம், Ministry of Electronics and Information Technology யின் அதிகாரபூர்வ ஆப் "APP". (Meity, Ministry of Electronics and Information Technology has released an app to check the safe

தொற்று நோய்: விவசாய புரட்சியின் சாபமா? - 1918 Pandemic Disease Influenza

Image
மனித வரலாற்றின் தொடக்கத்தில், மக்கள் சிறு சிறு குழுக்களாக நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். தங்களின் உணவிற்காக காடுகளில் மிருகங்களை வேட்டையாடினர். கிடைக்கும் இறைச்சியை உண்டு முடித்த பின்னர், அடுத்த பொழுது உணவுக்கு மீண்டும் பயணப்பட்டனர். அவர்கள் ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் தங்கியதில்லை. இதனால், சில சமயங்களில் கூட்டங்களிடையே நோய்கள் தொற்றினாலும், குழுவில் ஒருவர் அல்லது அனைவரையுமே கொன்று இருந்தாலும் கூட, வேறு குழுக்களுக்கு பரவாமல் இருந்தது. மனிதர்கள் உணவை தேடி காடுகளில் தொலை தூரம் செல்ல நேர்ந்ததால், செடி, கொடி மற்றும் கனி வகைகளை உண்ண தொடங்கினர். சில காலம் கடந்த பின்னர், உண்ண தகுந்த தாவரங்கள் எவை எவை என அனுபவத்தில் அறிந்து, அரிசி, கோதுமை, தினை போன்ற தானியங்களை விவசாயம் செய்ய தொடங்கினர். இதனால், மக்களுக்கு உணவு தடையின்றி கிடைக்க தொடங்கியது. உணவு தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், உற்பத்தி செய்த உணவுகளை சேமிக்கவும் தொடங்கினர். விவசாய புரட்சி, இதர துறைகள் உருவாக காரணமாகவும் அமைந்தது. ஒரு பகுதி மக்கள், விவசாயத்திலிருந்து விலகி மருத்துவம், அறிவியல், பொறியியல், கலை என்று படிக்க தொடங்கினர்

கணிதம் வழியே கொரோனா - Effect of Corona Spread and precautions

Image
தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள் என்று அனைத்திலும் ட்ரென்டிங்கில் இருப்பது “கொரோனா”. கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிக்கு வல்லரசுகள் நடுங்குவதை பார்த்தால், பயமாகத்தான் இருக்கிறது. பணிநிறுத்தங்கள், ஊரடங்கு, கூட்டம் கூடுதலை தவிர்த்தல், வெளிநாட்டு குடிமக்களுக்கு தடை, மாநிலங்களின் எல்லை மூடல், சமூகத்தை விட்டு விலகி இருத்தல் என்று இதுவரையில் அனுபவமில்லாத பலவற்றை கேட்பதற்கே புதிதாக இருக்கிறது. கடவுள் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுடன் வாழும் நம் நாட்டு மக்களுக்கு, “காலவரையின்றி கோவில்கள் மூடப்படுகிறது” என்ற செய்தி கூடுதல் அதிர்ச்சி. “கொரோனா பெரிய விஷயம் இல்லை” னு கூறிய உலக நாடுகள் பல ஸ்தம்பித்துள்ளது. என்ன செய்வதென்று அறியாமல் இந்த நாடுகள் அவசரநிலையை அறிவித்துள்ளன. இந்த சூழலில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாம், கொடிய வைரஸின் பரவலை தடுக்க பாடுபட வேண்டும். நம் சகோதர சகோதரிகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். வீட்டிலே இருக்க சொல்கிறார்களே, செலவுக்கு என்ன செய்வேன் என்ற ஓலங்கள் கேட்டாலும், பாதுக்காப்பாக இருக்கவில்லை என்றால் வைரஸின் பாதிப்பு பெரும் அழிவுக்கு

போலிகள் ஜாக்கிரதை - Double blind placebo - Be aware

Image
எத்திசையிலும் கேட்கும் ஒரே வார்த்தை “கொரோனா”. ரசம் சாபிட்டா நல்லதாம், பூண்டு கண்டிப்பா சேர்கனுமாம், உப்பு தண்ணில வாய் கொப்பளிக்கனுமாம், ஏதோ சொல்றாங்க, ஆனால் அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அறிவியல் உலகத்தில் மருந்துகள் இல்லை என்று வெளிப்படையாக சொன்ன பின்பும், நம்ம ஊருல ஒரு கூட்டம் விடாப்பிடியாக “மாட்டு மூத்திரத்தை” பரிந்துரைக்கிறது. கூட்டம் கூட்டமாக கூடி குடிக்கிறார்கள். அதில் சிலர், குடித்த முடித்த பின்பு உடம்புக்கு தேவலன்னு சொல்றாங்க. ஒரு மருந்தின் தன்மையை, மருந்தை உட்கொள்ளும் மக்கள் சொல்லும் பதிலை வைத்து எடை போட முடியாது. அதற்கென்று அறிவியல் உலகத்தில் சில பரிசோதனை முறைகளை வைத்துள்ளனர். இந்த பரிசோதனைகளை வெற்றிகரமாக கடக்கும் மருந்துகளே, “மருந்து”, மற்றவை அனைத்தும் போலிகளே.   அதை, “Double Blind Placebo Test” [ Ref ], இரட்டை குருட்டு போலி பரிசோதனை என்று கூறுகின்றனர்.  மருந்து அல்லாமல், எதை (மருந்து போல்) உட்கொண்டாலும் நோயிலிருந்து குணமடைபவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, நம்பிக்கையின் பலனால் குணமடைபவர்கள், இரண்டு நோய் சுழற்சி முறையால் குணம் அடைபவர்கள். உதாரணத்திற்க

இருள் வலை - Dark web, the beauty of beast

Image
தங்கம் முதல் தக்காளி வரை அனைத்து பொருட்களின் விலையை தெரிந்துக்கொள்ள, தெரியாத ஊருக்கு வழி கண்டுபிடிக்க, புதிய திரைப்படங்களின் விமர்சனங்களை பார்க்க, பழைய திரைப்படங்களை ரசிக்க, அருகிலுள்ள உணவகங்களை தேட என்று அனைத்திற்கும் நாம் பயன்படுத்துவது கூகுள்.காம்(google.com), facebook.com மற்றும் பல. அதில் தவறொன்றுமில்லை. ஆனால், google, facebook, போன்ற வலைதளங்கள் நீங்கள் என்ன தேடுகிறீர்கள்? எதற்காக தேடுகிறீர்கள், நீங்கள் தேடும் கருவி கைப்பேசியா? கணினியா? எந்த ஊரிலிருந்து தகவல் தேடப்படுகிறது? என்று பல விவரங்களை நமக்கு தெரியாமலேயே சேமிக்கிறது.  உதாரணத்திற்கு, சுற்றுலா முடித்து ஆசையாக முகநூலில் பதிவிடும் உங்கள் புகைப்படத்தை வைத்தே, நீங்கள் சென்று வந்த இடத்தை முகநூல் தெரிந்துகொள்ளும். பின்னர், உங்கள் நண்பர்கள் பட்டியலிலுள்ள நபர்களுக்கு, நீங்கள் அனுபவித்த சுற்றுலா தலத்தை, பார்வையிட பரிந்துரைக்கும். இதில் முகநூலுக்கு என்ன லாபமென்றால், அந்த சுற்றுலா தலத்தை சுற்றியுள்ள தங்குமிடம், உணவிடங்களின் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் பணம் ஈட்டும். அதுமட்டுமல்ல, நாம் பார்க்கும் வெப்சைட்டில் google, facebookன்

ஹிலாரி கிளிண்டனும் ரகசிய இமெயிலும் (Hillary Clinton - behind the screen) - 3

பில்கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் பதவி உயர்வு பெற்ற லின்ச் ( LYNCH) கிளிண்டனின் மிக நெருங்கிய நண்பர். எதற்காக இதை இங்கே கூறுகிறேன் என்றால், ஹிலாரி கிளிண்டன் வழக்குகளை விசாரித்த மூத்த அரசு வழக்கறிஞர் இவரே. ( ஹிலாரி க்கு எந்த தண்டனையும் இல்லாம விடுவித்த தலைவர்!!! ) ஹிலாரி கிளிண்டனின் விசாரணைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு LYNCHயும் BILL CLINTONனும் சந்தித்துள்ளனர். அவர்களின் சந்திப்பில் சந்தேகம் இருக்கிறது என்று எதிர் தரப்பு குற்றம் சாற்றியது. ஆனால், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று ஹிலாரி தரப்பு மறுத்தது. அதன் பின் ஹிலாரி யின் வழக்கு விசாரணை கிழக்கும் மேற்குமாக திசை மாறி சென்றது.  விசாரணை குழுவின் மூத்த அதிகாரியாக இருந்த காமே (COMEY) கொடுத்த குற்றபத்திரிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்  கொண்டு ஹிலாரி மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதில் இன்னும் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், COMEYக்கு சிறப்பு ஆலோசகர்களாக இரண்டு பேர் (STRZOK மற்றும் PAGE) நியமிக்கபட்டு இருந்தனர்.  தொடரின் பகுதி - 1 யை இங்கே வாசிக்கவும். தொடரின் பகுதி - 2 யை இங்கே வாசிக்கவும்